பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

விபத்து 

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீர வாஞ்சி நகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் மாரிமுத்து (43), இவர் தனது பைக்கில் கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் மாரிமுத்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்கிலி தேவானந்த் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கடையநல்லூர் முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் மகன் கருப்பசாமி (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story