கோவையில் காளானுடன் பீர் அருந்தியவர் உயிரிழப்பு

கோவையில் காளானுடன் பீர் அருந்தியவர் உயிரிழப்பு

கோப்பு படம் 

கோவையில் காளனுடன் பீர் அறுந்தியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் பலியானர்.

கோவையில் காளான் சாப்பிட்டு பீர் அருந்திய வாலிபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சதீஷ் (21). டிப்ளமோ படித்து உள்ள இவர் கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பாளையம் காளியம்மாள் காலனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவதினேஷ் என்பவரும் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.இந்நிலையில்நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற சதீஷ் பீர் வாங்கி அருந்தி உள்ளார்.அப்போது சைட் டிஷ்சாக காளான் ப்ரை சாப்பிட்டவர் சிறிது நேரம் கழித்து கழிவறை சென்று திரும்பியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சரிந்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பரான சிவதினேஷ் உடனே தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சதீசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.பீருடன் காளான் ப்ரை சாப்பிட்ட போது புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானாரா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் உடல் நலப்பாதிப்பு இருந்ததா? என துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளானுடன் பீர் அருந்திய வாலிபர் பலியான சம்பவம் அவரது நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story