கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டவர் கைது

கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டவர் கைது

குப்புசாமி 

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி, வனத்துறை அலுவலர்கள் மகேஷ், மனோகர் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதில், வெங்கலுார் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி,40; விளைநிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரின் இடையே கஞ்சா செடி பயிரிட்டது தெரிந்தது. தொடர்ந்து, விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 1.250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, குப்புசாமியை கைது செய்தனர்.

Tags

Next Story