வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர் கைது

வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர் கைது

வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர் கைது

வலிவலம் அருகே மது போதையில் அத்துமீறி நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் ஈடுபட்டவர் கைது.
நாகை மாவட்டம் வலி வலம் போலீசரகத்திற்கு உட்பட்ட காரியமங்கலம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி தவமணி வயது 36 பாலசுப்ரமணியன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில் தவமணி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு தவமணி வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் ரவிச்சந்திரன் வயது 33 என்பவர் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதனை கண்ட தவமணி மகன் யார் நீ இந்த நேரத்தில் ஏன் வந்தாய் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தவமணி மகனை ஆபாசமாக திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக தவமணி வலிவலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிப்ரவரி 7 புதன்கிழமை மாலை 3 மணிக்கு ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story