வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது - 5 பவுன் தங்க நகை பறிமுதல்

வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது - 5 பவுன் தங்க நகை பறிமுதல்

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது 

திருவாரூர் மாவட்டத்தில் வழிப்பறையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லையான திருவாரூர் மன்னார்குடி சாலை வெள்ளக்குடி மெயின் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளி ஐந்து பவுன் தாலி சங்கலியை பறித்து சென்றார். இதனைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லையான வடபாதி ஆண்டியப்பன் கோவில் அருகில் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் குற்றவாளி கூத்தாநல்லூர் வங்கார பேரையூர் காலனி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் கார்த்திக் என்பவர் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து வழிப்பறி செய்த ஐந்து பவுன் தாலிச் சங்கிலி முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story