மானாமதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - பணி நியமன ஆணை வழங்கல்

மானாமதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - பணி நியமன ஆணை வழங்கல்

வேலை வாய்ப்பு முகாம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலையில்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்;, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர்களின் நலனுக்காகவும், அவர்களின் திறன் மேம்பாட்டிற்கெனவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு, அரசால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இம்மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள், தங்களின் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும், மாவட்டத்தில் மூன்றாவது தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா மானாமதுரை பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர். இம்முகாமிற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 1,273 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்;. இதில் 362 வேலை நாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்;டுள்ளது. இதுதவிர 85 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story