பொன்னமராவதி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

பொன்னமராவதி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சு விரட்டில் சீறிப்பாயும் மாடுகள்

பொன்னமராவதி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடைக்கினர் இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 15 பேர் லேசான காயமும் மூன்று பேர் படுகாயமும் அடைந்தனர்.

Tags

Next Story