பெரிய கணக்கம்பட்டி கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பெரிய கணக்கம்பட்டி ஸ்ரீ ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய கணக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோயில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் மண்டல பூஜை நிறைவு விழா கணபதி ஓமத்துடன் தொடங்கி சுவாமிகளுக்கு புனித நீருடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஊர் பொதுமக்கள் பழம் வெற்றிலை பாக்கு தேங்காய் பலத்துடன் ஊர்வலமாக வந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நடைபெற ஸ்ரீ அனுமன் ஜெயந்தி பூஜை சிறப்பாக நடைபெற்றதாகவும். நாளை கூடாரவல்லி திருப்பாவை சேவைகள் சிறப்பாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story