அஷ்டபுஜ கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

அஷ்டபுஜ கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

மண்டலாபிஷேகம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் அஷ்டபுஜ பெருமாள் கோவிலானது பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இக்கோவிலில் 2 கோடி ரூபாய்க்கு பல்வேறு திருப்பணி செய்யப்பட்டு பிப்., 26ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.

நிறைவு நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மலர் அலங்காரமும், ஹோமம், கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் அஷ்டபுஜ பெருமாள் வீதியுலா வந்தார். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் பூவழகி,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story