மாங்காய் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு - வெயில் கொடுமை ?

மாங்காய் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு - வெயில் கொடுமை ?

பைல் படம் 

கும்பகோணம் பாலக்கரையில் தள்ளு வண்டியில் மாங்காய் விற்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கும்பகோணம் பாலக்கரையில் தள்ளு வண்டியில் மாங்காய் விற்ற மகேந்திரன் (48) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கும்பகோணம் அருகே சிவபுரத்தைச் சேர்ந்த இவர் தள்ளு வண்டியில் மாங்காய் நேற்று விற்று வந்த நிலையில் சற்று முன் பாலக்கரை அருகே பெரும்பாண்டி சாலையில் மயங்கி விழுந்ததாகவும்,கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் உயிரிழந்ததை பற்றி விவரம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story