விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்
விஜயகாந்த் பூர்ண நலம் பெற இறைவனை வேண்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தி வெளியீடு
விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தி வெளியீடு

தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகரும்மான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்ப பலதரப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் விஜயகாந்த் அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கேப்டன் விஜயகாந்த் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைவதாகவும். அனைவரின் அன்புக்கும் உரித்தான நல்லவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று,மக்கள் பணி தொடர,எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story