தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மனிதநேய மக்கள் கட்சி

தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மனிதநேய மக்கள் கட்சி

முசிறி அருகே தா.பேட்டையில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  

முசிறி அருகே தா.பேட்டையில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது பேசியதாவது, கடந்த 10 வருட ஆட்சியில் தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மாநில விரோத போக்கை கண்டித்தும், அனைவருக்கும் அனைத்தும் என திராவிட மாடல் அரசை சிறப்பாக நடத்தி வரும் தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அருண் நேருவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.

மமக திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர்கள் முகமது ரபீக், M P நஜீர், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன் உள்ளிட்ட மாவட்ட துணை அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story