மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டி !

மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டி !

ஆணழகன் போட்டி

எடப்பாடி அருகே மாநில அளவில் நடைப்பெற்ற ஆணழகன் மற்றும் பைஸப்ஸ் லிப்டிங் போட்டிகளில் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் முதல் பரிசுகளை தட்டிச் சென்றனர்.
எடப்பாடி அருகே மாநில அளவில் நடைப்பெற்ற ஆணழகன் மற்றும் பைஸப்ஸ் லிப்டிங் போட்டிகளில் திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் முதல் பரிசுகளை தட்டிச் சென்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாருதி பவர் ஜிம் நடத்திய ஓபன் பைசப்ஸ் லிப்ட்டிங் மற்றும் ஆணழகன் போட்டி பைசப்ஸ் லிப்டிங் மாநில நிர்வாகிகள் முரளி, சக்திவேல் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இப்போட்டிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தங்களது உடல் திறனை வெளிப்படுத்தி ஓவரால் சாம்பியன்களாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கணேசன், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் முதல் பரிசுகளை தட்டிச் சென்றனர். மேலும் சிறந்த வீரர்களுக்கு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags

Next Story