மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் 
மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை மஞ்சூரில் விநாயகர் கோவிலில் இருந்து 108 குடங்களில் புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விநாயகர் பூஜையுடன் வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி, ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

காலை விநாயகர் பூஜை, புண்யாகம், யாகசாலை, கலச பூஜை, இரண்டாம் கால வேள்வி விஷேச ஹோமங்களுடன் வேத, மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மாரியம்மன், கணபதி, முருகன் மற்றும் நவக்கிரக பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் மஞ்சூர், மஞ்சூர்ஹட்டி, மணிக்கல், கண்டிபிக்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி மாரியம்மனின் தரிசனத்தை பெற்றனர். மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story