வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நகரம்பட்டியில் உள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 171 வீரர்களும் பங்கேற்றனர். ஒரு காளை மாட்டிற்கு 20 நிமிட அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் 9 வீரர்கள் களம்கண்டனர். இதில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுபொருட்களும், பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

Tags

Next Story