சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு - மாடு முட்டியதில் வீரர் பலி

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு  - மாடு முட்டியதில் வீரர் பலி

பிரேம்குமார்

சிவகங்கை அருகேவுள்ள அல்லூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் பிரேம்குமார். இவர் தற்சமயம் மதகுபட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இவர் மாடுபிடி வீரராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று கல்லல் அருகேவுள்ள நடராஜபுரத்தில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் 32 காளை மாடுகளும் 280 வீரர்களும் பங்கேற்று விளையாடினர். இதில் பிரேம்குமாரும் பங்கேற்று விளையாடும்போது மாடு முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாடு முட்டி வீசியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story