தென்காசியில் மனுநீதி நாள் முகாம்

தென்காசியில் மனுநீதி நாள் முகாம்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
தென்காசி அருகே குத்துக்கல் வலசை ஊராட்சியில் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குத்துக்கல் வலசை ஊராட்சி, அய்யாபுரம் தேவிஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருமண மஹாலில் வைத்து நேற்று மாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்துத்துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story