கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி பஜனை தொடக்கம்

கீழப்பாவூா் கோயில்களில் மாா்கழி பஜனை தொடக்கம்

மார்கழி மாத பஜனை 

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஸ்ரீநரசிம்மபெருமாள் கோயில், கிருஷ்ணன் கோயில்களில் மாா்கழி மாத சிறப்பு பூஜைகள் தொடங்கியது. கீழப்பாவூா் ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் அதிகாலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளிபிரகாரத்தில் திரளான பக்தா்கள் வலம் வந்தனா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கீழப்பாவூா் தமிழா் தெருவில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலிலும் மாா்கழி மகோத்ஸவ விழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story