மரக்காணம் காவல் நிலைய காவலர் திடீர் மரணம்

மரக்காணம் காவல் நிலைய காவலர் திடீர் மரணம்

பார்த்தசாரதி

மரக்காணம் காவல் நிலைய காவலர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் அகரம் சித்தாமூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் விவசாயி. இவருடைய மகன் பார்த்தசாரதி வயது (37), இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு சில காவல் நிலையங்களில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து கடந்த ஆறு மாதத்துக்கு முன் மரக்காணம் காவல் நிலையத்திற்கு பணிக்கு வந்தார்.

இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மரக்காணம் காவல் நிலைய குடியிருப்பில் தங்கி இருந்த பார்த்தசாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்த போலீசார் சிகிச்சைக்காக அவரை மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story