இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாரத்தான் போட்டி

இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாரத்தான் போட்டி
போட்டியை துவக்கிய விஜய் வசந்த் எம்பி
நாகர்கோவிலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. விஜய் வசந்த் எம் பி போட்டியை தொடங்கி வைத்தார். நாகராஜா திடலில் இருந்து புறப்பட்ட ஓட்டம் பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை, டெரிக் ஜங்ஷன் வழியாக நேசமணி நகர் சர்ச் அருகே இந்த மாரத்தான் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நரேந்திர தேவ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என்று மூன்று பிரிவாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு 20 ஆயிரத்து ஒன்று, இரண்டாம் பரிசு பத்தாயிரத்தி ஒன்று, மூன்றாம் பரிசு ஐந்தாயிரம், நான்காம் பரிசு 2 ஆயிரத்து 500 மற்றும் பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story