அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி

காரைக்குடியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது


காரைக்குடியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் பெறக்கூடாது, என்பதை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் 2024 வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியினை காரைக்குடி ASP ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்த்துரை, அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story