கரூர் அருகே மாரத்தான் போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் அருகே மாரத்தான் போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

கரூர் அருகே இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், ரவுண்டானா அருகே எம் எஸ் ஹெச் கராத்தே இன்ஸ்டிடியூஷன் & மல்லிகா ஐஏஎஸ் அகாடமி மற்றும் கரூர் மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் இணைந்து நடத்திய புகழி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

நடைபெற்ற இந்த போட்டியில் 12 வயது 16 வயது மற்றும் பொது பிரிவினர் என மூன்று வகையான போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இந்த போட்டி வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் துவங்கி, புகழி மலையை சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு,

போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். விளையாட்டு வீரர்கள் சென்ற பகுதியில் பார்வையாளர்கள் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags

Next Story