மறவாமதுரையில் காமன் திருவிழா

மறவாமதுரையில் காமன் திருவிழா

காமன் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், மறவாமதுரையில் உள்ள மன்மத சுவாமி கோயிலில் காமன் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் உள்ள மன்மத சுவாமி கோயிலில் காமன் திருவிழா கடந்த 22ம் தேதி காப்புகட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. 24ம் தேதி காமன் தகனம் விழா நடந்தது. தொடர்ந்து 26ம் தேதி மன்மத சுவாமி உயிர் எழுப்புதல்,சுவாமி ரத ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மறவாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வாணவேடிக்கை, நாடகம் நடத்தப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story