மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு!

மார்ச் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு!

மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் மாசித் தேரோட்டத்தையொட்டி மார்ச் 11 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகரிலுள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் மாசித் தேரோட்டத்தையொட்டி மார்ச் 11 திங்கள்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவித்துள்ளார். மாவட்ட கருவூலம் மற்றும் சார் -நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். அதேபோல, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசுப் பொதுத்தேர்வுகள் மட்டும் அன்றைய தினம் நடைபெறும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வரும் மார்ச் 16-ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். வழக்கமாக சனிக்கிழமை வேலைநாட்களாக உள்ள அரசு அலுவலகங்கள், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக செயல்படும். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்ப தெரிவித்தார்.

Tags

Next Story