நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பாக அணிவகுப்பு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பாக அணிவகுப்பு

காவலர் அணிவகுப்பு 

காவல்துறை சார்பாக வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரியில் வள்ளலார் திடல் இருந்து காவலர் அணி வகுப்பு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரியில் வள்ளலார் திடல் இருந்து காவலர் அணி வகுப்பு நடைபெற்றது. இந்த அணி வகுப்பினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் போலீஸ் அப்சர்வர், விவேக் ஷாம் ஐஏஎஸ், மற்றும் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சிவராமன், ரமேஷ், ராஜேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பானது வள்ளலார் திடலில் ஆரம்பித்து தருமபுரி நான்கு ரோடு சந்தைப்பேட்டை வழியாக சென்று ஆறுமுக ஆச்சாரி வழியாக மற்றும் கந்தசாமி வாத்தியார் தெரு வழியாக சென்று அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த அணி வகுப்பு முடிவு பெற்றது.

Tags

Next Story