மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !

மாரியம்மன் கோவில்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் பட்டலப்பள்ளி ஊராட்சி தீர்த்தகிரிபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலய நூதன அஸ்தபந்தனை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ மாரியம்மனுக்கு புனித நீரால் ஆச்சாரிகளால் வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பொதுமக்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராமத்து மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story