மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா!

மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா!

திருப்பத்தூர் எல்லப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


திருப்பத்தூர் எல்லப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எல்லப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பஞ்சாயத்து எல்லப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் விடியற்காலை 7மணி முதல் இரவு 11 மணி வரை திருப்பள்ளியெழுச்சி, மேளதாளத்துடன் தட்டு வரிசை கொண்டு வருதல், இரண்டாம் கால யாகசாலை, ஸ்ரீ கணபதி மூலமந்திர ஹோமம், கடம்புறப்பாடு மகா கும்பாபிஷேகம் சதா நாம அர்ச்சனை விஸ்வரூப தரிசனம் மங்கள ஆரத்தி, தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் ஊர் பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தோடு மீது புனித நீர் ஊற்றி பின்னர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் மாரியம்மனை வழிபட்டனர் இந்த மகா கும்பாபிஷேக திருவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

Tags

Next Story