மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா!

மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா!

கூழ்வார்த்தல் திருவிழா

மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தளவநாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு செடல் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு காலை பூங்கரக ஊர்வலமும், மதியம் கொப்பரையில் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், ஏழைகளுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்‌.

Tags

Next Story