மார்த்தாண்டம் : 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி திருட்டு.

மார்த்தாண்டம் : 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி திருட்டு.
பைல் படம்
மார்த்தாண்டம் அருகே 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் அருமனை பகுதியை சேர்ந்த அனீஸ் (29) என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரே கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இதனால் கடை உரிமையாளரின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் கடையில் உள்ள நகைகள் மீது திடீரென மோகம் ஏற்பட்டு, உரிமையாளருக்கு தெரியாமல் பலமுறை சிறுக சிறுக நகைகளை திருட தொடங்கியிருக்கிறார். பின்னர் அதிக அளவில் நகைகளை திருட திட்டமிட்டு, தன்னுடன் பணிபுரியும் இரண்டு பெண் ஊழியர்களிடம் நகை ஆசை காட்டி, அந்தப் பெண்களின் சம்மதத்துடன் மூன்று பேரும் சேர்ந்து நகைகளை திருடியுள்ளனர்.

அனிசுடன் ரெண்டு பெண் ஊழியர்களும் கூட்டு சேர்ந்து மொத்தம் 100 பவுன் தங்க நகைகள் 6 கிலோ வெள்ளி நகைகள் என திருடியுள்ளனர். இதன் மதிப்பு 50 லட்சத்திற்கு மேல் என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பல மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக திருடி இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக கடை உரிமையாளர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தியதில் திருட்டு நடந்தது உறுதியானது. இதை அடுத்து அனிஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இரண்டு பெண் ஊழியர்களும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story