வீரபாண்டி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

வீரபாண்டி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

வீரபாண்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


வீரபாண்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் மத்திய அரசின் வங்கி கிளை திறக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும், வீரபாண்டி-கண்டாச்சிபுரம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகி வேல்மாறன் மற்றும் தமிழ்ச் செல்வன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story