மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலை கண்டித்து குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இஸ்ரேல் ராணுவ தாக்குதலை கண்டித்து குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பாலஸ்தீனிய நாட்டு மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து போர் தொடுத்து அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பி.காத்தவராயன், தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முல்லைவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story