எடப்பாடி ஸ்டேட் பாங்க் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி ஸ்டேட் பாங்க் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர மெகா ஊழல் செய்ததாக மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எடப்பாடி ஸ்டேட் பாங்க் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தேர்தல் பத்திர மெகா ஊழல் செய்ததாகவும் பாஜகவின் மோசடி கொள்ளைக்கு ஸ்டேட் பேங்க் நிர்வாகமே துணை போனதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளதாகவும் எடப்பாடி தாலுக்கா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எடப்பாடி ஸ்டேட் பேங்க் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எடப்பாடி ஸ்டேட் வங்கி முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story