இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுக்கோட்டையில் இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலைப் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், துரை. நாராயணன், மத்த ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் மு. அசோகன், தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாவட்டச் செயலர் சி. ஜீவானந்தம், மாணவர் சங்க மாவட்டச் செயலர் எஸ். ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர். இஸ்ரேல் அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை நகரச் செயலர் ஆர்.சோலையப்பன் நன்றி கூறினார்.

Tags

Next Story