கோவிலூர் அருகே மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிப் பிரமுகா் போக்ஸோவில் கைது

கோவிலூர் அருகே மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிப் பிரமுகா் போக்ஸோவில் கைது

கோப்பு படம் 

கோவிலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிப் பிரமுகா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த கோவிலூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலுபாரதி (45). இவா், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் குஜிலிம்பாறை வட்டார நிா்வாகியாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், டி.கூடலூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டது. கணவரிடமிருந்து பிரிந்த அந்த பெண், தனது 2 பெண் குழந்தைகளுடன், பாலுபாரதியின் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், அந்த பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலுபாரதி பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து எரியோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாா் வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் பாலுபாரதியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Tags

Read MoreRead Less
Next Story