உண்ணியூர்கோணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உண்ணியூர்கோணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர்
உண்ணியூர்கோணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு அங்கீகார வழங்க வேண்டும், அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு கதவு எண் வழங்கி வரி விதிப்பு செய்ய வேண்டும், குடியிருப்பு பகுதிகளை மலையிட குழும பகுதிகளில் இருந்து விடுவிக்க வேண்டும், உண்ணியூர்கோணம் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

உண்ணியூர்கோணம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன், ரஜீஷ்குமார், வட்டார செயலாளர் விஸ்வம்பரன், திற்பரப்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, ஸ்ரீஜா சந்திரன், மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story