விஷச் சாராய மரணங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விஷச் சாராய மரணங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விஷச் சாராய மரணங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூரில் விஷச் சாராய மரணங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விசை சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்திடவும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ் கனகராஜ் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.கே.சிவஞானம்,மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்திட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story