அங்காளம்மனுக்கு மாசி அமாவாசை சிறப்பு பூஜை

அங்காளம்மனுக்கு மாசி அமாவாசை சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், கல்வடகம் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி அமாவாசையையோட்டி நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடகம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி அம்மாவாசையையொட்டி அங்காளம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய, திரவிய பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story