கங்கைகொண்ட சோழபுரத்தில் மாசி மக திருவிழா தொடக்கம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாசி மக திருவிழா தொடக்கம்

கொடியேற்றம் 

கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தில் நடந்த மாசிமக திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரசித்திபெற்ற ஶ்ரீ சோழிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமிக்கு தீபாரதணை காட்டபட்டது. பின்னர் கொடியேற்றி வைக்கபட்டு திருவிழா நிகழ்ச்சி தொடங்கபட்டது. இதனையொட்டி 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பிப்ரவரி 21 ஆம் தேதி திருக்கல்யாணமும், 23 ஆம் தேதி திருத்தேர் பவனியும், 24 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story