குமாரசாமிப்பேட்டையில் மாசி மாத சஷ்டி உற்சவ வழிபாடு

குமாரசாமிப்பேட்டையில் மாசி மாத சஷ்டி உற்சவ வழிபாடு

மாசி திருவிழா

குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மாசி மாத சஷ்டி உற்சவ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசி மாத சஷ்டி உற்சவம் மாசி மாத சஷ்டி வளர்பிறை நாளில் நடைபெறும் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருக இந்த தினத்தில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி மாத சஷ்டி உற்சவ வழிபாடு வெகு விமர்சையாக காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கு பெற்றனர் உற்சவர் மேல தாளங்களுடன் திருக்கோவில் வளாகம் மற்றும் குமாரசாமிப்பேட்டை பகுதியில் முக்கிய தெருக்கள் வழியாக சுவாமி திருவீதி உலா வந்து இறுதியாக திருக்கோயிலை சென்றடைந்தார்.

Tags

Next Story