வெயிலுகந்த அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

வெயிலுகந்த அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

வெயிலுகந்தம்மன்

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பியது. காலை 5.28 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார். அதன் பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாள் பூஞ்சப்பரம், பூத வாகனம், சிம்ம வாகனம், உள்பட பல்வேறு வாகன பவனி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற பிப்.12-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளளனர்.

Tags

Next Story