கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு !

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு !

உயிரிழப்பு

வில்லுக்குறி அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை அடுத்த குதிரைபந்தி விளை என்ற இடத்தைசேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (51). இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஆறுமுக பெருமாள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது வலது கால் தொடையில் இரும்பு கம்பி குத்தி கிழித்ததால் சதை கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனே சக பணியாளர்கள் மீட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர்.பின்னர் அங்கிருந்து ஊருக்கு அழைத்து வரப்பட்டு ஆறுமுகப்பெருமாளை உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல்சிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆறுமுகபெருமாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story