ரயிலிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு.

ரயிலிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு.

 ராஜேந்திரன்

குழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினமணி மகன் ராஜேந்திரன். கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் தங்கி கொத்தனாராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊருக்கு வருவதற்காக மலப்புறத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது ரயில் நகர தொடங்கியதால் ராஜேந்திரன் தவறி தண்டவாள பகுதியில் விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் பகுழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.குதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ராஜேந்திரனுக்கு சுதா என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உண்டு. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story