வீட்டின் முன் தடுமாறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

வீட்டின் முன் தடுமாறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

காவல்துறை விசாரணை


தக்கலை அருகே வீட்டின் முன் தடுமாறி கீழே விழுந்த கொத்தனார் உயிரிழப்பு.
அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்.கொத்தனார். தக்கலை அருகே ராமன்பறம்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டவர். வீட்டின் முன் படியில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோ தித்தடாக்டர்கள், ஜேம்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி சாந்தி தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன ஜேம்சுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story