இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது  டெம்போ மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழப்பு

பைல் படம்


கருங்கல் அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்.

கருங்கல் அருகே காக்கவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் .வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் மகன் ராபின் ஜூஸ் டெம்போ டிரைவர். இவர்கள் இருவரும் பைக்கில் கருங்கல் சுண்ட விளை பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரில் ஆலஞ்சியில் இருந்து கருங்கல் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.இதில் ஜஸ்டின் ஜோஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

காயமடைந்த ராபின் ஜோஸ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story