கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக மற்றும் கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடலூர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக மற்றும் கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான கொடூர சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி இன்று வருவாய் மாவட்ட தலைநகரமான கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மற்றும் கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story