பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா

சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா நடைபெற்றது.


சுரண்டை பீடித்தொழிலாளா் மருத்துவமனையில் மே தின விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பீடித்தொழிலாளா் நல மருத்துவமனை சாா்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க வார விழா நடைபெற்றது. விழாவுக்கு, சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகி தங்கையாநாடாா் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். பீடித்தொழிலாளா் நல மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் அஞ்சலி தொழிலாளா் தினம் மற்றும் தூய்மை இயக்க வார விழா குறித்து பேசினாா். சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் நகராட்சி பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் சந்திரசேகர அருணகிரி, ராஜ்குமாா், வெயிலுமுத்து, சமூக ஆா்வலா் பிரபு, இலஞ்சி கல்வியியல் கல்லூரித் தாளாளா் ராஜகுமாா், செவிலியா் பாத்திமா, உதவியாளா் செல்லப்பா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story