இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா

பாபநாசம் ஒன்றியத்தில் 15 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றியத்தில் 15 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா 15 இடங்களில் ஒன்றிய செயலாளர் பொன் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம் தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜன் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பரமசிவம் பாபநாசம் ஒன்றிய விவசாய சங்க செயலாளர் புகழேந்தி துணைச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு மே தின கொடியினை கிளைகளில் ஏற்றி வைத்தனர் பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகை புது தெரு பெருமாள் கோவில் விசித்திர ராஜபுரம் ஈச்சங்குடி புளியநல்லூர் உள்பட 15 இடங்களில் கிளைகளில் மே தின கொடி ஏற்றி வைக்கப்பட்டது பாபநாசம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று நடைபெற்றது.

Tags

Next Story