மே தினம்: நினைவு சின்னத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை

தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு அமைக்கப்பட்ட தொழிலாளரின் நினைவு சின்னத்திற்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர் சரவெடி சரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story