கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி மாயம்

கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி மாயம்

போலீசார் வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே கல்லுாரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்த சூசை மகள் கனிமொழி, 23; இவர், கள்ளக்குறிச்சி தனியார் கல்லுாரியில் பி.எட்., படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8:45 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, இவரது தந்தை சூசை, போலீசில் புகார் செய்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story