தூத்துக்குடியில் தேர்வில் தோல்வியடைந்த மாணவி மாயம்

தூத்துக்குடியில் தேர்வில் தோல்வியடைந்த மாணவி மாயம்

கோப்பு படம் 

தூத்துக்குடியில் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவி 10ம் வகுப்பு படித்தார். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் இவர் தேர்ச்சி பெறவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்த அவர் கடந்த 15 ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இது குறித்து அவரது தந்தை தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story